அறிவு கெட்டவனங்க...
மாரியம்மன் கோயில்ல கூழ் ஊற்றும் திருவிழாங்கிற பேர்ல மடத்தனமான ஒரு வேலைய செஞ்சிட்டிருக்காங்க...
( பொதுவாக எல்லா காராமத்திலேயும் நடப்பதுதான் ) எங்க ஊர் திருவிழாவில் ஒரு பகுதியா சாமி ஆட வேண்டி சில பேரை வரிசையா நிற்க வச்சி பம்பை உடுக்கைன்னு அடிக்கிறாங்க...
ஒரு மணிநேரமா ஒன்றும் நடக்கலை...
பார்த்தான் ஒருத்தன் திடிர்ன்னு குதிச்சிக்கிட்டே வந்து 'தாம் தான் சாமிங்கிறான். ஊர்ல யாரோ செய்வினை வச்சதால தான் தன்னால (சாமி) எதுவும் செய்யமுடியலங்கிறான்...'
இப்படியே சாமி தன்னுடைய கையாலாகா தனத்துக்கு காரணம் சொல்லிக்கொண்டே இருக்கிறதே தவிர நாட்டு பிரச்சனை சமூக பிரச்சனைகளை பேசவுமில்லை அதை பற்றி யாரும் கேட்கிறதும் இல்லை. ஒருவழியா திருவிழா திருப்தி தானான்னு கேட்டு மலை ஏற்றிட்டாங்க...'
பாருங்க எவ்வளவு அறிவிலி தனமான போக்கு இது.
'மக்களின் நம்பிக்கை' என்பதற்காகவே இதனை ஏற்று கொள்ளும் மனோபாவம் ஏன் மாறமாட்டேங்குதுன்னு தான் தெரியல...
சிறுதெய்வ வழிபாட்டு முறையில் நடக்கும் இந்த செயற்பாடுகள் 'பண்பாட்டு' அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.
கோடையை போக்கி மழை பொழிந்து விளை நிலங்கள் குளிர செய்து உழவு தொழிலை வளங்கான வேண்டி மாரி(மழை)அம்மனை வழிபடுகிறார்கள்.
கோடை முடிந்தால் காரி காலம் வரும். அப்போது தானாக மழை பெய்யும் என்கிற தகவல் அறியும் வாய்ப்பையும் நுட்பங்களையும் நாம் பெற்று இருக்கிற சூழல் தற்போது உள்ளது.
இந்நிலையில் அம்மனையும் அய்யனையும் நம்பி இருப்பதனால் ஆக்கம் எதுவும் நிகழ போவதில்லை.
சாமி ஆடுதல் என்பதை கூட நாம் ஆய்வு செய்தால் 'அந்நியன்','சந்திரமுகி' திரைப்படங்களில் வரும் கதை போல தான். உளவியல் சிக்கலாகதான் அதை எடுத்துகொள்ள வேண்டும்.
தம்மீது சாமி வரவேண்டும் என்கிற ஆவலோடு இருக்கும் ஒருவரின் மனதில் ஆழமாக இறைநம்பிக்கையும் ஊன்றி இருக்கும். ஏற்கனவே உள்ளூர் பிரச்சனைகளும், சாமி செய்தால் நல்லா இருக்கும் என்று தாம் எதிர்பார்த்து வைத்திருந்த விசயங்களும் பொங்கி எழுந்து தன்னிலைபிறழ்ந்த நிலைக்கு ஆளாக்கப்படுகிறார் சாமியாடி.
பின்னர் சாமியாக மாறுகிறார்.
அப்போது அவரது மூளையையும், நரம்புகளையும் ஒரே அலைவுகளில் வைத்துக்கொள்ளவும்,பிறழ்வு நிலையை உச்சக்கட்டத்தில் வைத்துக்கொள்ளவும் பம்பை உடுக்கை ஒலியை ஏற்றி இசைக்கிறார்கள்.
பிறகு, இயல்பு நிலைக்கு கொண்டுவர வெப்பத்தை கொடுக்கிறார்கள். (வாயில் எரியும் கற்பூரத்தை போடுவார்கள்)
31.5.11
28.5.11
சாதி ஒழிய...
சாதி ஒழிய ஒரே வழி திருமணம் மட்டும் தான்.
சாதி விட்டு பெண்ணையோ பையனையோ பார்த்து திருமணம் செய்தால் ஒரு சாதிக்குள்ளேயே சுழன்று இருந்த மரபணுக்களும் புத்துணர்வு பெற்று மனித இனத்தின் ஆயுளை நீட்டீக்கும்...
ஆம்.
கால காலமாக அகமணம் புரிவதால் மரபணு தேய்மானம் ஏற்பட்டுள்ளது.
X சாதிக்குள்ளேயே மரபணுக்கள் பல்கும்போது அது தேய்மானமாகி வலுவிழக்கிறது. ஆனால் Yசாதிகாரங்களோட சம்பந்தம் பேசிட்டோம்னு வச்சிகுங்க அந்த ரியாக்ஷன், Zசாதி ஆகிடும். அப்புறம் மரபணு வீக் ஆகாது.
நம்மாளுங்க சாதியால வெட்டிக்கிட்டு சாகிறது இல்லாம
மரபணு தேய்ந்து புதுபுது நோயால சாகனுமா?
அதனால காதலுக்கு மரியாதை கொடுங்க...
சாதி ஒழிஞ்சிடும். கூடவே மனித இனம் நீண்ட காலம் வாழும்.
சாதி விட்டு பெண்ணையோ பையனையோ பார்த்து திருமணம் செய்தால் ஒரு சாதிக்குள்ளேயே சுழன்று இருந்த மரபணுக்களும் புத்துணர்வு பெற்று மனித இனத்தின் ஆயுளை நீட்டீக்கும்...
ஆம்.
கால காலமாக அகமணம் புரிவதால் மரபணு தேய்மானம் ஏற்பட்டுள்ளது.
X சாதிக்குள்ளேயே மரபணுக்கள் பல்கும்போது அது தேய்மானமாகி வலுவிழக்கிறது. ஆனால் Yசாதிகாரங்களோட சம்பந்தம் பேசிட்டோம்னு வச்சிகுங்க அந்த ரியாக்ஷன், Zசாதி ஆகிடும். அப்புறம் மரபணு வீக் ஆகாது.
நம்மாளுங்க சாதியால வெட்டிக்கிட்டு சாகிறது இல்லாம
மரபணு தேய்ந்து புதுபுது நோயால சாகனுமா?
அதனால காதலுக்கு மரியாதை கொடுங்க...
சாதி ஒழிஞ்சிடும். கூடவே மனித இனம் நீண்ட காலம் வாழும்.
26.5.11
ரஜினி : ???
ரஜினி சார் நல்லா இருக்காருங்களா?
பாவம் யார் பெத்த புள்ளையோ?
நாட்டுக்கு அப்படி என்ன பண்ணீட்டார்ன்னு தெரியல...
ஜனங்க கோயில் கோயிலா போய் உருண்டு புரள்றாங்க...
தீ மிதிக்கிறாங்க...
லதா மேடம் தாலி பாக்கியம் கெட்டி பெற பொம்பளைங்க பால்குடம் ஏந்தி தொடர் வழிபாடு செய்றாங்க...
ரஜினி சார் நாட்டுக்காக ஏதோ செஞ்சிருக்காருங்க...
நான்தான் வரலாறு சரியா படிக்கல போலிருக்கு...
நான் நினைக்கிறேன் சுதந்திரம் வாங்கி கொடுத்திருப்பாரோ...
மக்களுக்காக போராட்டம் நடத்தியிருப்பாரோ..
ச்சே...
எத்தனையாவது வகுப்பு வரலாற்று புத்தகத்துல போட்டிருக்காங்களான்னு தெரியலையே...
ஒரு வேளை சமச்சீர் கல்வியில இருக்கும்ன்னு நினைக்கிறேன்
நல்லவங்களுக்கு தான் சோதனை வரும் போலிருக்கு...
ரஜினி சார் பற்றி கூட தெரிஞ்சிக்காம இருக்கேன்.
பாவம் யார் பெத்த புள்ளையோ?
நாட்டுக்கு அப்படி என்ன பண்ணீட்டார்ன்னு தெரியல...
ஜனங்க கோயில் கோயிலா போய் உருண்டு புரள்றாங்க...
தீ மிதிக்கிறாங்க...
லதா மேடம் தாலி பாக்கியம் கெட்டி பெற பொம்பளைங்க பால்குடம் ஏந்தி தொடர் வழிபாடு செய்றாங்க...
ரஜினி சார் நாட்டுக்காக ஏதோ செஞ்சிருக்காருங்க...
நான்தான் வரலாறு சரியா படிக்கல போலிருக்கு...
நான் நினைக்கிறேன் சுதந்திரம் வாங்கி கொடுத்திருப்பாரோ...
மக்களுக்காக போராட்டம் நடத்தியிருப்பாரோ..
ச்சே...
எத்தனையாவது வகுப்பு வரலாற்று புத்தகத்துல போட்டிருக்காங்களான்னு தெரியலையே...
ஒரு வேளை சமச்சீர் கல்வியில இருக்கும்ன்னு நினைக்கிறேன்
நல்லவங்களுக்கு தான் சோதனை வரும் போலிருக்கு...
ரஜினி சார் பற்றி கூட தெரிஞ்சிக்காம இருக்கேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வணிகமொழியானது தமிழ்!
தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...
-
அறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...
-
கி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன்றி...
-
புதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...