இரண்டரை ஆண்டு காலம் இருக்கும்...
தலைகுனிவு வாழ்க்கை..
பெரும்பாலும் பொது இடத்தில்
தனிமையில் இருந்தாலே தலைகுனிவு தான்...
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நாமும் வளர வேண்டும் என்ற எண்ணத்தில் ஏற்பட்ட தொடர்பு...
காலத்தின் அவசியம், பணி நிமித்தம்...
தலைகுனிவு நிரந்தரமாகிவிட்டது...
ஜூலை 25, 2015 பகல் 1.30 மணி..
தலைகுனிவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வரப்போவதை அந்த நொடி வரை அறிந்திருக்கவில்லை...
மாநகர பேருந்து வருகைக்காக காத்திருந்த அந்த பொழுதிலும்..
தொடர்பு நெருக்கமாகவே இருந்தது...
பேருந்து வந்தது..
முதல்படி ஏறும் அந்த கணமும் என் இதயத்தோடுதான் ஒன்றிகிடந்தது...
மூன்று படி ஏறி சமதளத்தில் நின்று
இதயத்தை தடவினேன்....
உறவு அற்றுப்போனது...
அல்ல அல்ல உறவு களவாடப்பட்டது.
தொடர்பு திருடப்பட்டது..
அப்போது தான் இதயத்தை வெகுநேரம் தொட்டப்படியே உணர்ந்துக்கொண்டேன்..
சென்னையில் திருடர்கள் இருப்பதை....
தலை நிமிர்ந்தது...
தலை நிமிர்வு என் சிந்தனைக்கு தீணிப்போட்டது...
அன்றைய நாளிலிருந்து..
பொது இடத்தில் தனிமையில் இருக்கும் போதெல்லாம்...
உலகை கவனித்தது என் கண்கள்..
மூளைக்குள் சிந்தனை, கற்பனை...
கவிதைகள்... அக்கறை கீற்றுகள்...
அசைபோட்டன எண்ணற்ற எண்ணங்கள்...
ஸ்மார்ட்டாக உணர்ந்தேன்...
ஸ்மார்ட்போன் தொலைத்த நிமிடத்தில் இருந்து...
ஸ்மார்ட்போன் தொலைந்ததாலோ, திருடப்பட்டதாலோ என் மனம் பதறவில்லை...
என் மனம் மீண்டது என்பதில் எனக்குள் திருப்தி...
இது எத்தனை காலம் என்பது தான்
எனக்குள் இன்னொரு கேள்வியும்...
ஆனாலும்...
தலைநிமிர்வுக்கொண்டேன்....
இது எத்தனை காலம் என்பது தான்
எனக்குள் மீண்டும் மீண்டும் கேள்வி...
அதுவரையிலும்...
தலைநிமிர்வுக்கொள்வேன்....