19.11.14

உலக கழிவறை தினம் இன்று....



உலகின் 700 கோடி மக்களில் 250 கோடி மக்கள் மேம்பட்ட சுகாதாரமான கழிப்பறை வசதி பெறாமல் உள்ளனர்.

இன்னமும் 100 கோடி மக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

கழிவறை வசதி இல்லாததால், சில வேளை பெண்களும், சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவும் நேரிடுகிறது.

இந்த நிலையை நாம் ஒருபோதும் ஏற்க முடியாது.

சர்வதேச வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததும் முதன்மையானதுமாக சுகாதாரம் வலியுறுத்தப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டே ஐநா மன்றம் நவம்பர் 19 ந்தேதியை உலக கழிவறை தினமாக அறிவித்துள்ளது.

இந்த தினத்தில் கிராமப்புறங்களில் சுத்தமான சுகாதாரமான கழிவறையை பயன்படுத்த மக்களிடம் விழிப்புணர்வு ஊட்ட ஒவ்வொரும் முயற்சி எடுப்போம்.



#worldtoiletday #opendefecation #sanitation

10.10.14

இன்று உலக மனநல நாள்...

மனச்சிதைவு நோய்
உங்கள் உணர்ச்சிகளைப் பற்றி பிறரிடம் பேசுங்கள். 
பிறர் நலத்திலும் அக்கறை செலுத்துங்கள். 
மற்றவர்களுடன் பேசி மகிழுங்கள். 
உங்களுக்கு எது பிடிக்குமோ அவற்றில் ஈடுபாடு செலுத்துங்கள்..... 

உங்களின் திறமை எது, பலவீனம் எது என்பதை உணர்ந்து அவற்றுக்கு ஏற்றாற்போல் செயல்படுங்கள்.
உடற்பயிற்சி மூலம் செயல்துடிப்புடன் இருங்கள். 

இவையெல்லாம் உங்களை நல்ல மன நிலையில் வைத்திருக்க உதவும்.

அனைவரும் மனநலத்திற்கு முன்னுரிமை அளிப்பதை மனநல தினத்தில் உறுதியேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 
இந்த ஆண்டிற்கான கருத்துருவாக “மனச்சிதைவு நோயுடன் ஆரோக்யமான வாழ்வை வாழுதல்” என்பதை வலியுறுத்துகிறது உலக சுகாதார அமைப்பு. 

உலகளவில் மனச்சிதைவு நோயினால் 2 கோடிக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களின் இறப்பு சாதாரண மக்களை விட 10-இருந்து 25 ஆண்டுகள் முன்னதாகவே நிகழ்ந்துவிடுவதாக  உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

எனவே, மனச்சிதை உள்ளிட்ட கடுமையான மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நலமுடன் நீண்ட காலம் வாழ உதவிட வேண்டும் என உலக மக்களுக்கு கேட்டுக்கொண்டுள்ளது. 

மனச்சிதைவு நோய் என்றால் என்ன..?

உளநோயினால் பாதிப்புக்குள்ளானவர்களுள் பெரும்பாலோர் ஸ்கிசோப்ரென்யா (Schizophrenia) எனப்படும் மனச் சிதைவு நோய்க்கு ஆளானவர்.  இந்த ஸ்கிசோபெரன்யா என்பதன் பொருள் மனம் உடைந்துபோதல் என்பதாகும். மனச்சிதைவு அல்லது ஆளுமைச் சிதைவு (Splitting of Mind or Personality) இதன் விளக்கமாகும். இந்த நோயினை, கிரெப்ளின் என்பவர் 1896ஆம் ஆண்டு டிமென்சியா பிரேகாக்ஸ் (DementiaPraecox) எனக் குறிப்பிட்டார். இதனை புலுலர் (1950) என்பார் ஸ்கிசோபெரன்யா என அழைத்தார்.


இந்த மனச்சிதைவு நோயாளிகள் இயற்கை மீறிய அல்லது இயல்பு நிலை தாழ்ந்த (Abnormal) நிலையில் காணப்படுவர். இவர்கள், உலகெங்கும் அங்கிங்கெனாதபடி, நிறைந்துள்ளனர். இவர்கள், பகுத்தறிவு மனப்பான்மைக்கும், காரண_காரிய விளைவுகளுக்கும், உலகியல் நடைமுறை (Worldliness)க்கும் அப்பாற்பட்ட விந்தை வேடிக்கை மனிதர்கள்!!

மனச்சிதைவு நோயாளர்களின் மூளையில் இரசாயன மாற்றங்கள் நடைபெறுகின்றன என்று சொல்வதைவிட, அவர்கள் சமூகத்தால் பழிவாங்கப்பட்டவர்கள் என்று சொல்வதே மிகப் பொருத்தமாக உள்ளது. மனிதர்களின் முழு ஆளுமையையும் சிதைக்கும் மிகக் கடுமையான மனநோய் தான் மனச் சிதைவு நோயாகும்.

மனச்சிதைவு நோயாளர்கள் இரவில் நீண்ட நேரம் கண்விழித்துக்கொண்டு எதையாவது படித்துக்கொண்டு இருப்பார்கள் அல்லது ஏதாவது வெட்டி வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். இவர்களிடம் காணப்படும் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், இவர்கள் சமூகத்திலிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதேயாகும். 

மனச்சிதைவு நோய் என்பது எல்லோருக்கும் புரியக்கூடிய சில நோய்க்குறிகளின் சேர்க்கையாகவே உள்ளது.

அந்நோய்க்குறிகளாவன :
 தர்க்கரீதியற்ற சிந்தனைகள்.
 விநோதமான உணர்வுகள்.
 பிறழ்வு நம்பிக்கைகள்.
 மாயக்குரல்கள் மற்றும் மாயக்காட்சிகள்.
 இயக்கங்களில் ஏற்படும் தடைகள்.

தொடர் துக்கமின்மை
தனக்குத்தானே பேசிக் கொள்ளுதல்
தனக்குத்தானே சிரித்துக் கொள்ளுதல்
காதில் மாயக்குரல்கள் கேட்டல்
அதிகமாக சந்தேகப்படுதல்
அனைவரும் தன்னைப் பற்றியே பேசுவதாக உணர்வு
சுற்றத்தார்கள் அனைவரும் தனக்கு எதிராக செயல்படுகின்றனர் என்ற தவறான எண்ணம்
உடல் தூய்மை படிப்படியாகக் குறைதல்

சில எடுத்துக்காட்டுகள்:

இவர்கள், தமக்கு எல்லாம் வல்ல இறையாற்றல் இருக்கிறது; தாங்கள் கடவுளின் அவதாரம்; என்றெல்லாம் எண்ணி அவ்வாறே நடந்துகொள்வர். தங்களை பகவான் என்று அழைத்துக் கொள்வர். பிறரும் அவ்வாறே தம்மை அழைக்க வேண்டும் என் விரும்புவர். இன்றும் பலர், தாங்கள் இறையடியார்கள், கடவுள் பக்தர்கள்; கடவுளோடு உரையாடுபவர்கள் அவரின் அருளுக்குப் பாத்திரமானவர்கள் என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருப்பவர்கள்.

இவர்கள் திடீரென சிரிப்பார்கள். அதே போல் சற்று நேரத்திற்கெல்லாம் திடீரென அழுவார்கள். இதே போல அழவேண்டிய தருணங்களில் சிரிப்பார்கள். சிரிக்கவேண்டிய சூழ்நிலையில் அழுவார்கள். இப்படி தாறுமாறான உணர்வுகள் அடிக்கடி இவர்களுக்கு ஏற்படும். இவர்களுடைய உள் உலகம் விநோதமானது. இவர்களால் புறஉலகில் உள்ளவர்களுடன் இயல்பான முறையில் தொடர்பு கொள்ள இயலுவதில்லை. சில சமயம் இவர்கள் சொன்ன ஒரு கருத்தையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். பிறருடைய கேள்விகளை இவர்கள் புரிந்துக் கொள்வதில் சிக்கல் ஏற்படுவதால், கேட்ட கேள்விக்கு சம்பந்தம் இல்லாமல் பதில் அளிப்பார்கள். இவர்கள் மனதில் ஒரே நேரத்தில் பல சிந்தனைகள் தோன்றுவதால், ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் பதில் அளிப்பார்கள். இவர்கள் சிந்திக்கும் போது சட்டென்று தடை உண்டாவதால், சில சமயங்களில் பிறர் கேட்ட கேள்விகளுக்கு பதிலே சொல்லாமல் பேந்தப் பேந்த விழிப்பார்கள்.

மனச்சிதைவு நோயாளர்களின் காதுகளில் சில மாயக்குரல்கள் கட்டளையிட்டுக் கொண்டேஇருக்கும். இக்கட்டளைக் குரல்களால் மனச் சிதைவு நோயாளர்கள் படும் துன்பங்கள் சொல்ல முடியாதவை. இவை சில சமயம் நோயாளர்களை மிரட்டும். அவர்களை விமர்சனம் செய்யும். தவறான செயல்களில் ஈடுபட வைக்கும். சில சமயங்களில் இக்குரல்களுக்கு நோயாளர்கள் பதில் அளிக்கவும் செய்வார்கள். இம்மாயக்குரல்கள் இவர்களை சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்ளவும் மற்றும் கொலை செய்யவும் தூண்டும்.

மாயக்காட்சிகளும் சில மனச்சிதைவு நோயாளர்களுக்கு தோன்றுகின்றன. தனக்கு அருகில் யாரோ படுத்து இருப்பது போலவும், தங்களை கொலை செய்ய சிலர் ஓடிவருவது போலவும், இறந்து போனவர்களின் ஆவி தங்களுடன் சேர்ந்து உணவு உண்பது போலவும் மாயக்காட்சிகள் தோன்றும். சில அசாதாரணமான காட்சிகளையும், சில அருவருப்பான காட்சிகளையும் சில மனச்சிதைவு நோயாளர்கள் பார்த்ததாகக் கூறியுள்ளனர். மாயச் சுவையுணர்வுகளையும், மாய வாசனை உணர்வுகளையும் கூட சில நோயாளர்கள் அனுபவித்துள்ளனர்.

24.9.14

பெண்களிடையே இணையம் தொடர்பான கல்வி

கூகுள் இந்தியா, பெண்கள் இணையத்தை பயன்படுத்த் வேண்டும் என்பதற்காக பரப்புரை இயக்கத்தை தொடங்கியுள்ளது.
இந்தி நடிகர் பர்ஹாந் அக்தர் உடன் இணைந்து, இதற்காக சமுக ஊடகங்களில் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் பெயர்.. #ReachForTheSky (fb.com/hashtag/ReachForTheSky)
இதன் நோக்கம் பெண்களிடையே இணையம் தொடர்பான கல்வியை/அறிதலை அதிகரிக்க செய்தல்.
கடந்த ஆண்டு மின்கல்வி திட்டத்தை தொடங்கிய கூகுள் HelpingWomenGettingOnline என்ற இயக்கத்தை செயல்படுத்தியது. இதற்கு உதவியாக இண்டெல், எச்.யூ.எல்., ஆக்சிஸ் வங்கி இருந்தது.
இதன் விளைவாக கடந்த ஓராண்டில் மட்டும் இணையத்தை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை 35 விழுக்காடு உயர்ந்துள்ளது.. ஆண்களின் எண்ணிக்கை 31 % தானாம்.
கூகுள் சொல்கிறது... உலகில் இணையம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா கிட்டத்தட்ட இரண்டாவது இடத்தில் உள்ளது என்று. ஆனால், இணையத்தை ப்யன்படுத்துவோரில் பெண்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளை விட குறைவு என்று கவலைக்கொள்கிறது கூகுள்.
இதற்கு என்ன செய்யலாம் என்ற திட்டத்தில் மேலே குறிப்பிட்ட நடிகரின் MARD என்ற் அமைப்பு மூலம் ReachForTheSky என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளது கூகுள்.
பாலின பாகுபாடின்றி பெண்களின் வளர்ச்சிக்கு , உதவ வேண்டும்... குறிப்பாக இணையத்தில் பெண்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள , ப்யன்பாடுகளை அறிந்துக்கொள்ள உதவ வேண்டும்.
தகவல் மற்றும் இணைய கருவிகள்ன் பயன்பாடுகளை இளம்பெண்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் .
இதன் மூலம் இந்தியாவின் எதிர்காலம் அடுத்த கட்டத்திற்கு நகரும் என்பதில் ஐயமில்லை.... என்று கூகுள் நம்பிக்கை தெரிவிக்கிறது.
இந்த வேலைகளில் கூகுள் ஈடுபடுவது சரி... அது என்ன இந்தி நடிகரோடு கூட்டு.... என்று எண்ணியிருந்தால் உங்களுக்காக நொறுக்கு தகவல்..
அந்த நடிகரின் MARD அமைப்பு பெண்களுக்கு ஆதரவான ஆண்கள் அமைப்பு... Men Against Rape & Discrimination பாலியல் வன்கொடுமை & பாகுபாடுக்கு எதிரான ஆண்கள்...
குறிப்பு: இது செய்தி மட்டுமல்ல செயல்பாட்டுக்கானதும் கூட. தகவல் புரட்சியில் சமபங்காற்றுவோம்.!

10.8.14

கூகுளின் 2 படி சரிபார்ப்பு: பாதுகாப்பின் அடுத்தக்கட்டம்

ஒவ்வொரு முறையும் நம்ம ஜிமெயிலை யாராவது பார்த்திருப்பாங்களோ... நம்ம பாஸ்வேர்ட் தெரிஞ்சிருக்குமோ... என்ற கவலையா உங்களுக்கு ?

இப்படி சதா சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கும் ரகசிய மனிதர்களுக்கு பயமே இல்லாத வசதி இருக்கிறது... 

அது என்னன்னு தெரிஞ்சுக்கனுமா.. 

காத்திருங்க .. அப்படின்னு சில வாரங்களுக்கு முன் சொல்லியிருந்தேன்....

கொஞ்ச நாள் இணைய சிக்கலால் உங்களுடன் இணையமுடியவில்லை.

இப்ப நம்ம தகவலுக்கு வருவோம்.

நம்மில் பல பேர் ரகசிய வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்... நமக்கு என்று தனிப்பட்ட வாழ்க்கை யாருக்கும் தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.  

கடவுச்சொல்லால் அனைத்தும் யாருக்கும் தெரியாமல் மறைத்து விடுகிறோம். இதையும் சிலர் உடைத்து உள்ளே சென்று நம்ம தகவல்களை அறிந்துக்கொள்கிறார்கள்.

இவற்றை தடுக்க என்ன தான் வழி என்பவர்களுக்கு எண்ணினா தான் வழி.. !

புரியவில்லையா...? சிந்திச்சா தான் வழி என்றேன்.

நாம சிந்திப்பதற்கு முன்னே கூகுள் சிந்தித்து விட்டது.

நாம் மட்டுமே அணுகமுடியுங்கிற வழிமுறைகளை வைத்துள்ளது.

அதற்கு பெயர் 2-படி சரிபார்ப்பு மூலம் உள்நுழைதல்

 அதாவது  2-Step Verification


உங்கள் கடவுச்சொல் மற்றும் உங்கள் தொலைபேசி ஆகிய இரண்டையும் பயன்படுத்துவதன் மூலம் வெளிநபர் உங்கள் கணக்கில் உள்நுழைவதிலிருந்து தடுக்கலாம்.


1.  ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்துதல்
2. இணையத்திலிருந்து மென்பொருளைப் பதிவிறக்குதல்
3. மின்னஞ்சல் செய்திகளில் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்தல்
இதுபோன்ற செயலின் போது, தீங்கிழைப்பவர்கள் உங்களுடைய கடவுச்சொல்லை அறிந்து உள்நுழைந்துவிடுவார்கள். அவர்கள் கடவுச்சொல் வைத்திருந்தாலும் அவர்களை  2 படி சரிபார்ப்பு மூலம் தடுக்க முடியும்.

உங்கள் கடவுச்சொல்லை தீங்கிழைப்பவர்கள் திருடும்போது, அவர்கள் சிலவற்றைச் செய்ய கூடும்...

1. உங்களுடைய எல்லா மின்னஞ்சல்கள், தொடர்புகள், புகைப்படங்கள்  பார்க்கலாம் அல்லது நீக்கவும் செய்யலாம்.
2. தேவையற்ற அல்லது தீங்கு விளைவிக்கக்கூடிய மின்னஞ்சல்களை உங்கள் தொடர்புகளுக்கு அனுப்பலாம்
3. உங்களுடைய பிற கணக்குகளுக்கான (வங்கி, ஷாப்பிங், போன்றவை.) கடவுச்சொற்களை மீட்டமைக்க உங்கள் கடவுச்சொல்லைப் பயன்படுத்தலாம்.

இவற்றை தடுக்க 2 படிநிலை சர்பார்ப்பு மிகவும் அவசியமாகிறது.



எப்படி இந்த முறையானது செயல்படுகிறது..?

1 கூகுள்-ல் உள்நுழையும் போது, வழக்கம்போல் உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடுவீர்கள்.
2. பிறகு, உங்கள் தொலைபேசிக்கு உரை, குரல் அழைப்பு அல்லது செல்பேசி பயன்பாடு வழியாக அனுப்பப்பட்ட குறியீடு கேட்கப்படும். அதனை உள்ளிட வேண்டும்.

இப்பொழுது தான் ஜிமெயில் அல்லது கூகுளின் மற்ற பயன்பாடுகள் திறக்கும்.

சரி. இப்ப உங்களுக்கு இன்னொரு கேள்வி கேட்க தோன்றும்...

நான் என் கணினியில் பயன்படுத்தும் போது ஏன் நான் 2 படிநிலை சரிபார்ப்பு வைத்துக்கொள்ள வேண்டும். நான் பயன்படுத்தாத கருவிகளில் நுழையும்போது மட்டும் சரிபார்ப்பு இருந்தால் போதுமே என்று எண்ணுவீர்கள்...

உள்நுழையும்போது, குறிப்பிட்ட கணினியில் 2ம் படிநிலை குறியீடு கேட்கப்படாமல் இருக்க வழி உள்ளது. அப்படி செய்யும் போது, நீங்கள் உள்நுழையும்போது கணினியானது உங்கள் கடவுச்சொல்லை மட்டுமே கேட்கும்.

இதே வழிமுறைதான் செல்பேசியில் மின்னஞ்சல் பயன்படுத்துவோருக்கும்.

சரி இதை எப்படி செயல்படுத்துவது..?

இதை சொடுக்கவும்: https://accounts.google.com/SmsAuthConfig அல்லது https://www.google.com/settings/security என்ற இணைப்பிற்கு சென்று 2 படிநிலை சரிபார்ப்பு வசதியை நிறுவிக்கொள்ளலாம்..

அதற்கான வழிமுறைகள் படங்களாக கீழே உள்ளன..









மேற்கண்ட  1, 2 வது நிலைகளை அடுத்து, 3 மற்றும் 4வது நிலைகளில் இந்த பாதுகாப்பு முறை பற்றிய விளக்கம் இருக்கும்.

அனைத்து முடிந்தாயிற்றா..?

இப்போது நீங்கள் பாதுகாப்பு வலையத்திற்குள் கூகுள் கணக்கை கொண்டு வந்துவிட்டீர்கள்..

சரி . இதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றாலும், நிறுத்திக்கொள்ளலாம். அதற்கும் அங்கேயே இணைப்பு இருக்கும்..


2 படிநிலை சரிபார்ப்பின் சிறப்பம்சங்கள்


உரைச் செய்தி வழியாக குறியீடுகளை பெறுதல்
உங்கள் செல்பேசிக்கு சரிபார்ப்பு குறியீடுகளை கூகுள் குறுஞ்செய்தி வழியாக அனுப்பும். 

மாற்று தொலைபேசி எண்கள்
மாற்று தொலைபேசி எண்களைச் சேர்க்கவும், ஏனெனில் முதன்மை தொலைபேசி கிடைக்காத நேரத்தில் Google சரிபார்ப்பு குறியீடுகளை உங்களுக்கும் அனுப்புவதற்கான மற்றொரு வழியாகும்.
 தொலைபேசி அழைப்பை விரும்புகிறீர்களா?
உங்கள் சரிபார்ப்பு குறியீடு மூலம் உங்களுடைய  தொலைபேசிக்கு Google அழைக்கும்

பிரதி குறியீடுகள்
உங்கள் தொலைபேசிகள் கிடைக்காத நேரங்களில், அதாவது பயணம் செய்யும்போது ஒரு முறை பயன்படுத்தும் பிரதி குறியீடுகளை பதிவிறக்கிக்கொள்ளலாம்.

இணைப்பும் இல்லை, சிக்கலும் இல்லை
Android, iPhone அல்லது BlackBerry ஆகியவற்றிற்கான Google Authenticator பயன்பாடானது சரிபார்ப்புக் குறியீடுகளை உருவாக்கி தரும். உங்கள் சாதனத்தில் தொலைபேசி அல்லது தரவு இணைப்பு இல்லாத நேரங்களிலும் இது வேலைசெய்யும்.

உங்கள் கணினிகளைப் பதிவுசெய்யவும்
உள்நுழையும்போது, உங்கள் கணினியில் மீண்டும் குறியீடு கேட்கப்படாமல் இருக்க அமைப்புகளில் தேர்வு செய்துக்கொள்ளலாம்.


நினைவிற்கொள்க... இந்த இரண்டு படிநிலை சரிபார்ப்பு மூலம் உள்நுழைதலுக்கு.. செல்பேசி அவசியம். அதில் தான் ரகசிய குறியீடு ஒவ்வொரு முறையும் வரும்.

சந்தேகங்களுக்கு YourRaajV@Gmail.com அல்லது fb.com/YourRaajv என்ற முகநூல் முகவரிக்கு செய்தி இடவும்.



இன்னும் தொழில்நுட்பம் பேசுவோம்....  

22.7.14

சிறிய ரக இன்வெர்டர்களை தயாரிக்க அழைக்கிறது கூகுள்..!



மின்னியல் பொறியாளர்களே... உங்களால் சிறிய அளவில் இன்வெர்ட்டர் தயாரிக்க முடியுமா.. அல்லது அதற்கான திட்டத்தில் இருக்கிறீர்களா..?

கூகிளின் லிட்டில் பாக்ஸ் சேலஞ் - ல் இணைந்திடுங்கள்..
பெரிய பெரிய கருவிகளெல்லாம்.. சிறிய பேட்டரியில் இயங்கும் போது.. அதைவிட சிறிய ரகத்தில் உருவாக்கி மின்சாரத்தை பயன்படுத்த நம்மால் ஏன் முடியாது..

இப்படி கேட்கிறது கூகுள்..

ஏன் முடியாது..?




இந்த சுட்டியை தட்டி விவரத்தை படித்து, தயாராகுங்கள் மின்னியலில் புரட்சியை ஏற்படுத்த.....

ம்... கிளப்புங்கள்...

The Little Box Challenge
தலைப்பைச் சேருங்கள்

7.7.14

ஜிமெயிலை லாக் அவுட் செய்ய மறந்துவிட்டீர்களா....?

கடந்த வாரம் ஜிமெயிலில் இருந்துக்கொண்டே அலுவலக மின்னஞ்சல்களை பெறுவது, பதில் எழுதுவது பற்றி விளக்கமாக பார்த்தோம்...

இன்று, தேவையில்லாமல் வெவ்வேறு இடங்களில் சைன் இன் செய்துவிட்ட ஜிமெயிலை சைன் அவுட் செய்வது பற்றி பார்ப்போம்.

ஏற்கனவே சொன்னது போன்று, உங்கள் ஜிமெயில் சைன் அவுட் செய்யாமல் சென்றுவிட்டீர்கள்...


உடனே அதனை யாருக்கும் தெரியாமல் சைன் அவுட் செய்ய வேண்டும்... என்ன செய்யலாம்... என்று யோசிப்பவர்களுக்கு பதில் இருக்கிறது.

செல்பேசியிலோ, வீட்டு கணினிலேயோ அல்லது இணைய வசதி உள்ள ஒரு கணினியில் அமர்ந்துக்கொள்ளுங்கள்...

உடனே ஜிமெயிலை திறந்து உள் நுழையுங்கள்....

எதற்காக ஜிமெயிலை திறந்தோம் என்ற சிந்தனையே இல்லாமல், இன்பாக்சில் மெயில் படித்துக்கொண்டிருக்காதீர்கள்... ஆன்லைனில் இருக்கிறவங்க வெட்டியா ஏதாவது செய்திட்டிருப்பாங்க....அவங்களோடு அரட்டை செய்துக்கொண்டிருக்காதீர்கள்...

உங்கள் அஞ்சல் பெட்டியின் கீழ் பகுதிக்கு வாங்க...

அங்கு கீழ் காணும் படித்தில் இருப்பது போன்று தெரிகிறதா... ?





அங்க last activity கீழ் details என்பதை சொடுக்கவும்....

இப்போது இன்னொரு திரை தோன்றும்...


அதில், இதற்கு முன் எங்கெங்கு உங்கள் ஜிமெயில் திறக்கப்பட்டது... தற்போது எந்தெந்த கணினியில் திறந்திருக்கிறது என்பதை காட்டும்..

அங்கு sign out of all other sessions என்பதை சொடுக்கினால்...

உலகின் எந்த மூலையில் உங்கள் ஜிமெயில் திறந்திருந்தாலும்.... உடனே மூடப்படும்....

இது பாதுகாப்பு தொடர்பான விஷயமும் கூட. அதாவது... உங்கள் கடவுச்சொல்லை அறிந்த வேறுயாரேனும் உங்கள் ஜிமெயிலை திறந்திருந்தாலும் இந்த முறை மூலம் கண்டறியலாம்.

மேற்காணும் படத்தில் location என்ற பகுதியில் IP எண்கள் இடம்பெற்றிருக்கும். அதன் மூலம் வெளி நபர் அணுகலை கண்டறியலாம்.


சரிங்க.... பாதுகாப்பு முக்கியம்... அதனால இந்த விஷயத்தில் கவனமாக இருங்கள்...


ஒவ்வொரு முறையும் நம்ம ஜிமெயிலை யாராவது பார்த்திருப்பாங்களோ... நம்ம பாஸ்வேர்ட் தெரிஞ்சிருக்குமோ... என்ற கவலையா உங்களுக்கு ?

இப்படி சதா சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கும் ரகசிய மனிதர்களுக்கு பயமே இல்லாத வசதி இருக்கிறது... 

அது என்னன்னு தெரிஞ்சுக்கனுமா.. 

காத்திருங்க.....


-வெ.யுவராசன்.

2.7.14

அலுவலக மின்னஞ்சல்களை, சொந்த மின்னஞ்சல் பெட்டியில் பெற வேண்டுமா..?


கூகுள் !!!

இந்த சொல் இன்றைய தலைமுறைக்கு இன்றியமையாத சொல்....

கூகுள் நிறுவனம் வழங்கியுள்ள தேடுபொறி... மூலைமுடுக்கெல்லாம் தேடி குப்பையாக இருந்தாலும், சீராக கொடுக்க வல்லது.

இந்த கூகுளின் தயாரிப்புகள் ஏராளம்...

அவற்றை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் ஏராளம்...

ஆனால், நம்மவர்கள் கூகுள் தயாரிப்புகளில் உள்ள மேம்போக்கான பயன்களை அனுபவித்து, உள்ளார்ந்த சேவைகளை பயன்படுத்தாமலே இருந்து விடுகின்றனர்...


அப்படி மறைந்து கிடக்கும் பல உண்மை தகவல்களை உங்களுக்கு அளிக்கலாம் என்றிருக்கிறேன்....

சரி... 

இன்னைக்கு என்ன பார்க்கலாம்....?


உங்களுக்கு என தனி  ஒரு மின்னஞ்சல் வைத்திருப்பீர்கள் தானே.. 

அதுவும் கூகுள் வழங்கும் ஜிமெயிலை தான் பொதுவான பயன்பாட்டிற்கு வைத்திருப்பீர்கள் என்று நான் எண்ணுகிறேன்...

அதைப்பற்றிய ஒரு தகவலை அறிந்துக்கொள்வோம்......


அதுக்கு முன்னாடி கீழ்காணும் கேள்விக்கு பதில் அளியுங்கள்...

1. ஜிமெயில் அதிகம் பயன்படுத்தினாலும், எனக்கு யாஹூ, ரெடிஃப், ஆஃபிஸ் மெயில் என 2 அல்லது 3 மின்னஞ்சல்கள் இருக்கிறது.

2. ஜிமெயிலை அடிக்கடி பார்ப்பேன்.. ஆனால், ஆஃபிஸ் மெயிலை கூட மெயில் அனுப்பி இருக்கேன்னு யாராவது சொன்னாதான் திறந்துபார்ப்பேன்...

3. எல்லா மெயிலும் ஒரே இன்பாக்சில் கிடைக்கிறதா இருந்தா ரொம்ப நல்லா இருக்கும்.

4. ஒரே இன்பாக்சில் எல்லா மெயிலும் கிடைக்கிற மாதிரி, ஒரே இடத்தில் இருந்து வெவ்வேறு மெயில் ஐடியில் மெயில் அனுப்புற மாதிரியான வசதி இருந்தா கோடான கோடி புண்ணியம்...


என்ன மக்களே... 

மேலே இருக்கிற யோசனை தான் உங்களுடையதுமா..?

....

ஆமாம்ங்கிற உங்கள் குரல் என் காதுக்கு கேட்டிருச்சு...


சரி சுருக்கமா விசயத்திற்கு வருவோம்...


ஜிமெயில்  சேவையில் உங்களுடைய மற்ற மின்னஞ்சல்களையும் பெறும் வசதி உள்ளது.

அதை எப்படி செயல்படுத்துவது பற்றி படிப்படியாக பார்க்கலாம்..


முதலில் உங்கள் அலுவலக மின்னஞசல்களை ஜிமெயிலில் பெறும் வசதியை செய்து பார்க்கலாம்....

1. ஜிமெயிலை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்.
2. இன்னொரு இடத்தில் அலுவலக மின்னஞ்சலையும் திறந்துவைத்துக்கொள்ளுங்கள்.
3. உங்கள் ஜிமெயிலின் வலது மேல் மூலையில் Settings (அமைப்புகள்) சின்னத்தை சொடுக்கவும்.
4. அங்கு Settings என்பதை சொடுக்கவும்
5. இப்போது திறக்கப்படும் திரையில், Forwarding and POP/IMAP என்பதை சொடுக்கவும்.

6. இங்கு POP Download பகுதியில்,  Enable POP for all mail. தேர்வு செய்யவும்.

அடுத்து Save Changes சொடுக்கவும்.


7. தற்போது  Accounts and imports என்பதை சொடுக்கவும்.
8. Check mail from other accounts என்ற இடத்தில் Add a POP3 mail account you own என்பதை சொடுக்கவும்

9. தற்போது தோன்றும் திரையில் உங்கள் அலுவலக மின்னஞ்சலை இடவும்.
10. Next என்பதை சொடுக்கி அடுத்த பக்கத்திற்கு வரவும்.
11.  இப்போது User Name, Password பகுதியில் அலுவலக மின்னஞ்சல் முகவரி மற்றும் அதன் கடவுச்சொல்லை இடவும்...
12. அதற்கு கீழுள்ள, Leave a copy of retrieved message on the server. என்பது உங்கள் மின்னஞ்சல் பெறப்பட்ட உடன், அலுவலக மின்னஞ்சல் பெட்டியில் அந்த அஞ்சல் இருக்க வேண்டுமா...அல்லது நீக்கிவிட வேண்டுமா என்ற கேட்கப்படுகிறது. அஞ்சலின் அசல் அலுவலக அஞ்சல் பெட்டியில் இருக்க வேண்டும்என்றால், அதனை தேர்வு செய்ய வேண்டாம்.
13. Always use a secure connection (SSL) when retrieving mail. இதனை தேர்வு செய்துக்கொள்ளவும்.
14. Label incoming messages: என்பது உங்கள் ஜிமெயிலில் , அலுவலக அஞ்சல் வருகிறது என்றால், அதற்கான குறியீடு வேண்டுமல்லவா... தேவையெனில் அதனை தேர்வு செய்துக்கொள்ளவும்.
15. Archive incoming messages (Skip the Inbox) என்பது, உங்கள் ஜிமெயிலில் அலுவலக அஞ்சல் இடம்பெறும் இடம் சம்பந்தமானது... இன்பாக்ஸில் வரவேண்டும் என்றால் தேர்வு செய்ய வேண்டாம். இல்லையெனில், தேர்வு செய்துக்கொள்ளவும்.
16. அடுத்து Add Account சொடுக்கவும்.
17. தற்போது, உங்களது அலுவலக மின்னஞ்சல் ஜிமெயிலோடு சேர்ந்துவிட்டது.
18. இறுதியாக, if you want to be able to send mail as this address என்று கேட்கும் அதனை தேர்வு செய்தால், அலுவலக மின்னஞ்சல் முகவரியிலேயே பதிலளிக்கலாம்.

முயற்சி செய்து பாருங்கள்....

மேற்கண்ட வழிமுறைகளில் சிக்கல் ஏற்பட்டால், கீழுள்ள கருத்துப்பெட்டியில் குறிப்பிடவும்.. உடனே பதிலளிக்கிறேன். 


அடுத்து.....

உங்கள் மின்னஞ்சலை அலுவலகத்தில் திறந்து வைத்து பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்... உடனே ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது... அதில் கவனம் செலுத்திக்கொண்டு எழுந்து சென்று விடுகிறீர்கள்... வீட்டுக்கு போன உடனே, மின்னஞ்சலை மூடாமல் வந்துவிட்டோமே என்ற ஞாபகம் வருகிறது...

யாரிடமாவது சொல்லி லாக் அவுட் செய்ய சொல்லலாம் என்றால் நாமே மூன்றாவது மனிதருக்கு மின்னஞ்சலை பார்க்க அனுமதிப்பது போல் ஆகிவிடும்...

யாருக்கும் தெரியாமல் லாக் அவுட் செய்ய வேண்டும்... எப்படி சாத்தியம்....?

சாத்தியப்படுத்துவோம்... விரைவில்....

- யுவராசன். வெ

வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...