24.11.13
கடவுள்.....
சிலருக்கு திடீர் பக்தி ஏற்படுவதை அண்மையில் கவனிக்கமுடிந்தது...
’பிறருக்கு இன்னா செய்தலை தவிர்க்கும்’ எவருக்கும் இந்த நிலை இல்லை. அவர்கள் என்றும் போல் நன்றாக தான் உள்ளனர்.
இந்த அப்பப்ப தப்பு செய்து அப்பப்ப அதுக்கு பரிகாரம் தேடுபவர்கள் போலியான பக்தியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் வேடம் தான் மிகுந்திருக்கும்....
உள்ளம் பெருங்கோயில்
ஊன் உடம் பாலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தோர்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளாமணி விளக்கே!
எனும் திருமந்திரப்பாடல்களிலேயே... இறைவழிபாட்டை வகுத்திருக்கிறார்கள்..
ஆனாலும், இப்படி வேடமிட்டுதான் இறையை வணங்குதல்...
எத்தகைய விளம்பரப் பிரியர்கள் என்று பாருங்கள்....
( இந்தப் பாடலில் ’கள்ளப் புலன்கள்’ என்பது மிக முக்கியமான வார்த்தை – நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மை உலக இன்பங்களின்பக்கம் இழுத்துவிடக்கூடியவை கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய ஐம்புலன்கள். ஆகவே அவற்றைக் ‘கள்ளப் புலன்கள்’ என்று அழைத்தார்கள் – கள்வனைக் கட்டுப்படுத்தி வைப்பதுபோல் புலன்களை அடக்கப் பழகவேண்டும் என்பது பொருள் ...
திரு மூலரே பகுத்தறிவோடு தான் சொல்லியிருக்கிறார்...)
இறை என்பதை நாம் தான் வகுத்தோம்...
அது அடையாளம்....
அவ்வளவுதானே ஒழிய...
ஆற்றலற்றது....
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை உணர்ந்து...
வாழ்க்கையை வழிநடத்தினால்... பரிகாரத்திற்கு வேலையில்லை....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வணிகமொழியானது தமிழ்!
தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...
-
அறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...
-
கி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன்றி...
-
புதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக