புதிய ஆண்டு என்பதெல்லாம்.. கால ஓட்டத்தின் வெறும் அடையாளங்கள் தான்...
கிறித்து பிறப்பு அடிப்படையில் தோன்றிய ஒரு கால அலகினை உலகளாவிய கொண்டாட்டமாய் மக்கள் களித்துக்கொள்கிறார்கள்..
ஓர் ஆய்வு சொல்கிறது... உலகின் மொழிகளை அழிக்கும் கொடுங்கொல்லியாக ஆங்கிலம் இருந்து வருகிறது என்று.
தொழில்நுட்ப வளர்ச்சியில் கண்கூடாகவே நாம் அதை கண்டு வருகிறோம்..
மொழி அழிவு என்பதில் இனத்தின் அழிவையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இன அழிப்புக்கு போர் மட்டுமல்ல.. மொழி மீதான ஆதிக்கமும் தான் காரணமாகிறது.
கிறித்து சமயத்தவரின் ஆண்டு முறை இன்று உலக மக்களின் தவிர்க்க முடியாத நாட்காட்டியாகிவிட்டது.
ஆனால், தமிழ் சமயம் / சமூகம் தனக்கான அடையாளங்களை இழப்பதையும், இனத்தார் சற்று கருத்தில் கொள்ள வேண்டும் என்ற ஆதங்கம் தற்போது என்னுள் மேலோங்கி இருக்கிறது.
உலக பொதுமறை எழுதிய பொய்யா புலவன் வள்ளுவ பெருந்தகை பிறப்பையொட்டி, சுறவம் (தை) முதற்கொண்டு ஆண்டு பிறப்பையும், தொடர்முறையையும் பின்பற்ற வேண்டும் என தமிழ் அறிஞர் பெருமக்கள் வகுத்தனர்.
ஆனால், தமிழ் மரபு, மாண்பு, பண்பு, அறிவியல் ஆகியவற்றுக்குப் பொருத்தமாகதவையும், பல்லாயிரமாண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழினத்தின் காலத்தை வரையறுக்க இயலாத ஆண்டுமுறையை பின்பற்றி வருகின்றனர்.
இது போன்ற தமிழர் தம் ஒருமைக்கொள்ளாத சூழலும், நம் இனத்தின் அடையாளங்களை, பண்பாட்டு சுவடுகளை நாமே ஐயத்திற்காளாக்க காரணமாகிறது.
தமிழர் பெருமைகளை பேச தமிழர் திருநாளாம்.. தைப்பொங்கல், தமிழ் புத்தாண்டை சிறப்புற கொண்டாடுவோம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக