புதிய தலைமுறை தொலைக்காட்சி நிலையம் தாக்கப்பட்ட தகவல், ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களின் உணர்ச்சிகளை தட்டி எழுப்பி விட்டது. கருத்து சுதந்திரம் என்பதில் இருந்து ஊடக ஊழியர்களின் பாதுகாப்பு வரையிலான அனைத்து மட்டத்திலும் குரல்கள் ஒலித்தன. ஒலிக்கின்றன.
இங்கு கவனிக்க வேண்டியது.
ஒரு ஊடகம் தனது பதிப்பில் அல்லது ஒளிபரப்பில் சிறப்பு தொகுப்புகளை வழங்கும் போது, நடுநிலைமை அல்லது உண்மையின் பக்கமிருந்து தனது கருத்தை ஆழமாக முன்மொழியும்; அதற்கான ஆதரவு குரல்களையும் பதிவு செய்யும்.
அதேபோல், சர்ச்சை ஏற்படும் வாய்ப்புள்ள பொருளில் ஆவணமாக்கும்போது, இரு தரப்பு கருத்துகளையும் பதிவாக்கி ஒளிபரப்பவோ, பதிவிடவோ செய்யும்.
நிற்க.
ஒரு செய்தியில் தனி நபரையோ, நிறுவனத்தையோ, அரசையோ, அமைப்பையோ குற்றஞ்சாட்டுவதாக இருந்தால், குற்றஞ்சாட்டுக்கு ஆளாகுபவரின் பதில்/கருத்தை கேட்டு அதனையும் சேர்த்து ஒளிபரப்புவதையே பெரும்பான்மை ஊடகங்கள் கடமையாக கொண்டுள்ளன. அந்த வகையில், புதிய தலைமுறை கவனமாக செய்திகளை கையாண்டு வருவதை மறுக்க முடியாது.
இந்நிலையில், தலாக் என்ற ஆவணப்படமும், தாலி குறித்த விவாத நிகழ்ச்சியும் நேரலையாக இல்லாமல் பதிவு செய்து தணிக்கை செய்து பின்னர் ஒளிபரப்ப திட்டமிட்டிருந்தது புதிய தலைமுறை.
ஆனால் அதனை முழுமையாக பார்க்காமல் மதங்களின் பிரதிநிதிகளாக நினைத்துக்கொண்டிருப்பவர்கள் எதிர்த்தார்கள்... விளைவு... திட்டமிட்ட நாளில் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.
இரண்டு நிகழ்வுகளும் வெவ்வேறு காலக்கட்டத்தில் நிகழ்ந்தன.
தங்கள் கருத்துகளை முன்வைத்து போராடுவது எதிர்ப்பவர்களின் உரிமை. ஆனால் அதுவே எல்லைமீறி எதிர் தரப்பை அழித்தொழிக்க நினைப்பது எப்படி ”அறம்” ஆகும்.
ஒளிபரப்புவதாக திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிகளை முழுமையாக பார்க்காமலே எதிர்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்பது தான் புரியாத புதிர்.
இவர்களை அறிவிலி என்பதை விட பகுத்தறிய பயப்படுகிறார்கள் என்கிற பொருளிலே நாம் கையாள வேண்டியிருக்கிறது.
இன்னொருபுறம் அரசியல்.
ஆளும் கட்சிக்கு எதிரானவர்களுக்கு தீனிப்போடும் சம்பவமாகவும் இது மாறிவிடுகிறது.
ஆக, இங்கு ஊடகங்கள் நிலைக்கண்ணாடியாக இருக்கும் போதே இத்தனை அக்கப்போர் என்றால், கூகுள் கண்ணாடியாக மாறும் போது என்ன நிகழும்..?
அண்மையில் புதியதலைமுறை அலுவலகத்தில், வெடிக்கும் பொருளை (பட்டாசோ / வெடிகுண்டோ) வீசிவிட்டு சென்ற நபர்களால்.... ஊடக ஊழியர்களுக்கு மற்றுமொரு அச்சம் தொற்றுகிறது.
கருத்தால் சண்டையிட்டது போக... உயிரை பணயம் வைப்பது தான் அந்த அச்சம்.
இது தான் அச்சுறுத்தலின் உளவியல்....
ஆக..
அனைத்தையும் அடக்கி வைத்துக்கொண்டு, இதுபோன்று அச்சுறுத்தும் ........களை அழைத்து, கூடி பேசி, எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என்பதை முடிவு செய்ய நாம் எந்த தருணத்திலும் பணிந்துவிடப் போவதில்லை...
ஊடக அதிபர்கள் கூட சில நேரங்களில் ஒத்துவராமல் போகலாம்... ஆனால் ஊடகவியலாளன் அந்த வகையில் சமரசம் ஆகிவிடமாட்டான்.
ஊடகவியலாலர்களின் ஒற்றுமையும், ஒருமித்த குரலும்.... அண்மைக்கால நிகழ்வுகளில் நிதர்சனமாகிறது.
இது தொடர வேண்டும்... நியதிகளுக்குட்பட்ட எமது பயணமும் அவ்வாறு பயணமாகட்டும்.
கவனிக்க..
இந்த தருணங்களை சில “கோளாறுகள்” கோணலாக்கிவிடுவதும் நமக்கு சவாலானதே..
புதிய தலைமுறை தாக்கப்பட்ட செய்தி அனைத்து ஊடகங்களும் பதிவு செய்தன. நாடே கவனித்தது. நாடாளுமன்றத்திலும் ஒலித்தது.
இங்கு அந்த நிறுவனம் பப்ளிசிட்டி தேட வேண்டிய அவசியம் என்ன..?
தாக்கப்பட்ட செய்தியை சமூக தளத்தில் பதிவிட்டு, அதனை பணம் செலுத்தி பரவ செய்வதில் உள்நோக்கம் என்ன...?
விளம்பரம் தேடுகிறார்களா...? முகநூலில் லைக்குகளை பெற இதுதான் தருணமா..? கருத்துரிமைக்கு காவலாளி நீங்கள் என்பதில் கேள்வி எழுகிறதே..?
தெரியாமல் நிகழ்ந்துவிட்டதாக இதனை கூறிவிடமுடியாது என்றாலும், பொறுப்பற்ற சிலரின் இந்த செயல்கள் கொச்சைப்படுத்துவதாகவே தோன்றுகிறது...?
போராடிய அத்தனை பேரின் குரல்களுக்கு பின்னால் ஒரு நியாயம் இருக்கிறது.....
குறிப்பிட்ட இந்த செயலில் என்ன வெளிப்படுகிறது..?
கேள்வி மட்டுமே மிச்சம்....
கவனிக்குமா நிருவாகம்?
இங்கு கவனிக்க வேண்டியது.
ஒரு ஊடகம் தனது பதிப்பில் அல்லது ஒளிபரப்பில் சிறப்பு தொகுப்புகளை வழங்கும் போது, நடுநிலைமை அல்லது உண்மையின் பக்கமிருந்து தனது கருத்தை ஆழமாக முன்மொழியும்; அதற்கான ஆதரவு குரல்களையும் பதிவு செய்யும்.
அதேபோல், சர்ச்சை ஏற்படும் வாய்ப்புள்ள பொருளில் ஆவணமாக்கும்போது, இரு தரப்பு கருத்துகளையும் பதிவாக்கி ஒளிபரப்பவோ, பதிவிடவோ செய்யும்.
நிற்க.
ஒரு செய்தியில் தனி நபரையோ, நிறுவனத்தையோ, அரசையோ, அமைப்பையோ குற்றஞ்சாட்டுவதாக இருந்தால், குற்றஞ்சாட்டுக்கு ஆளாகுபவரின் பதில்/கருத்தை கேட்டு அதனையும் சேர்த்து ஒளிபரப்புவதையே பெரும்பான்மை ஊடகங்கள் கடமையாக கொண்டுள்ளன. அந்த வகையில், புதிய தலைமுறை கவனமாக செய்திகளை கையாண்டு வருவதை மறுக்க முடியாது.
இந்நிலையில், தலாக் என்ற ஆவணப்படமும், தாலி குறித்த விவாத நிகழ்ச்சியும் நேரலையாக இல்லாமல் பதிவு செய்து தணிக்கை செய்து பின்னர் ஒளிபரப்ப திட்டமிட்டிருந்தது புதிய தலைமுறை.
ஆனால் அதனை முழுமையாக பார்க்காமல் மதங்களின் பிரதிநிதிகளாக நினைத்துக்கொண்டிருப்பவர்கள் எதிர்த்தார்கள்... விளைவு... திட்டமிட்ட நாளில் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.
இரண்டு நிகழ்வுகளும் வெவ்வேறு காலக்கட்டத்தில் நிகழ்ந்தன.
தங்கள் கருத்துகளை முன்வைத்து போராடுவது எதிர்ப்பவர்களின் உரிமை. ஆனால் அதுவே எல்லைமீறி எதிர் தரப்பை அழித்தொழிக்க நினைப்பது எப்படி ”அறம்” ஆகும்.
ஒளிபரப்புவதாக திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிகளை முழுமையாக பார்க்காமலே எதிர்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்பது தான் புரியாத புதிர்.
இவர்களை அறிவிலி என்பதை விட பகுத்தறிய பயப்படுகிறார்கள் என்கிற பொருளிலே நாம் கையாள வேண்டியிருக்கிறது.
இன்னொருபுறம் அரசியல்.
ஆளும் கட்சிக்கு எதிரானவர்களுக்கு தீனிப்போடும் சம்பவமாகவும் இது மாறிவிடுகிறது.
ஆக, இங்கு ஊடகங்கள் நிலைக்கண்ணாடியாக இருக்கும் போதே இத்தனை அக்கப்போர் என்றால், கூகுள் கண்ணாடியாக மாறும் போது என்ன நிகழும்..?
அண்மையில் புதியதலைமுறை அலுவலகத்தில், வெடிக்கும் பொருளை (பட்டாசோ / வெடிகுண்டோ) வீசிவிட்டு சென்ற நபர்களால்.... ஊடக ஊழியர்களுக்கு மற்றுமொரு அச்சம் தொற்றுகிறது.
கருத்தால் சண்டையிட்டது போக... உயிரை பணயம் வைப்பது தான் அந்த அச்சம்.
இது தான் அச்சுறுத்தலின் உளவியல்....
ஆக..
அனைத்தையும் அடக்கி வைத்துக்கொண்டு, இதுபோன்று அச்சுறுத்தும் ........களை அழைத்து, கூடி பேசி, எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என்பதை முடிவு செய்ய நாம் எந்த தருணத்திலும் பணிந்துவிடப் போவதில்லை...
ஊடக அதிபர்கள் கூட சில நேரங்களில் ஒத்துவராமல் போகலாம்... ஆனால் ஊடகவியலாளன் அந்த வகையில் சமரசம் ஆகிவிடமாட்டான்.
ஊடகவியலாலர்களின் ஒற்றுமையும், ஒருமித்த குரலும்.... அண்மைக்கால நிகழ்வுகளில் நிதர்சனமாகிறது.
இது தொடர வேண்டும்... நியதிகளுக்குட்பட்ட எமது பயணமும் அவ்வாறு பயணமாகட்டும்.
கவனிக்க..
இந்த தருணங்களை சில “கோளாறுகள்” கோணலாக்கிவிடுவதும் நமக்கு சவாலானதே..
புதிய தலைமுறை தாக்கப்பட்ட செய்தி அனைத்து ஊடகங்களும் பதிவு செய்தன. நாடே கவனித்தது. நாடாளுமன்றத்திலும் ஒலித்தது.
இங்கு அந்த நிறுவனம் பப்ளிசிட்டி தேட வேண்டிய அவசியம் என்ன..?
தாக்கப்பட்ட செய்தியை சமூக தளத்தில் பதிவிட்டு, அதனை பணம் செலுத்தி பரவ செய்வதில் உள்நோக்கம் என்ன...?
விளம்பரம் தேடுகிறார்களா...? முகநூலில் லைக்குகளை பெற இதுதான் தருணமா..? கருத்துரிமைக்கு காவலாளி நீங்கள் என்பதில் கேள்வி எழுகிறதே..?
தெரியாமல் நிகழ்ந்துவிட்டதாக இதனை கூறிவிடமுடியாது என்றாலும், பொறுப்பற்ற சிலரின் இந்த செயல்கள் கொச்சைப்படுத்துவதாகவே தோன்றுகிறது...?
போராடிய அத்தனை பேரின் குரல்களுக்கு பின்னால் ஒரு நியாயம் இருக்கிறது.....
குறிப்பிட்ட இந்த செயலில் என்ன வெளிப்படுகிறது..?
கேள்வி மட்டுமே மிச்சம்....
கவனிக்குமா நிருவாகம்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக