கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11.9.11

நல்வழிகாட்டி - ஏழைகளின் கல்விக்கான இளைஞர்கள் கூட்டமைப்பு

நல் வழிகாட்டி - எதிர்கால கனவு என்பதை கூட கனவு காண முடியாத ஏழை குழந்தைகளின் கல்விக்காகவும், சமூகத்தில் வெளியுலகமே அறியாதவர்களை பன்னாட்டு பார்வைக்கு கொண்டு செல்லவும், ஏழைக்குழந்தைகளின் வாழ்க்கை வழிகாட்டியாய், இளைஞர்களை உள்ளடக்கி உஇயங்கி வரும் அறக்கட்டளை.....

உங்கள் பகுதியில், உங்களுக்கு தெரிந்த பகுதியில் கல்வி கற்க வறுமை தடையாக கொண்ட மாணவர்கள் உள்ளனரா... 
தேவைக்கு.../ உதவிக்கு... அழையுங்கள்.... 
9600579018 / 9578675904

http://www.nalvazhikatti.org/

8.9.08

உலக எழுத்தறிவு நாள்

ஐ.நா கல்வி,அறிவியல்,பண்பாட்டு நிறுவனத்தின் முயற்சியால் ஆண்டு தோறும் செப்தம்பர் 8 ஆம் நாள் "உலக எழுத்தறிவு நாளாக" கொண்டாடப்படுகிறது. 1966ல் தான் இந்த நாள் முத்ன்முதலாக கொண்டாடப்பட்டது. தனி மனிதர்களுக்கும்,பல்வேறு வகுப்பினருக்கும் சமுதாயங்களுக்கும் எழுத்தறிவு எவ்வளவு முதமையானது என்பதை எடுத்துரைப்பதே இந்த நாளின் குறிக்கோள் ஆகும். எழுதப்படிக்கக்கற்றுக்கொடுப்பதற்கும், எயிட்ஸ், காச நோய், மலேரியா போன்ற கொள்ளை நோய்கள் , தொற்று நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவத்ற்கும் முதன்மை அளிக்கும் வகையில் "எழுத்தறிவும் நலவாழ்வும்"என்பது இந்த ஆண்டு உலக எழுத்தறிவு நாள் இயக்கத்தின் கருப்பொருளாக தெர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. "எழுத்தறிவித்தலே சிறந்த மருந்து" என்ற முழக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் 77.4 கோடி மக்கள் இன்னமும் எழுதப்படிக்க தெரியாமல் இருக்கிரார்கள். அதாவது வயது வந்தவர்களில் 5 பேரில் ஒருவருக்கு எழுதப்படிக்கத்தெரியாது. இவர்களில் மூன்றில் இரு பகுதியினர் பெண்கள். 7.5 கோடி குழந்தைகள் பள்ளி செல்லாமல் இருக்கிறார்கள். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டவர்கள்,அரைகுறையாக பள்ளிகள் செல்பவர்கள் ஏராளம்.
எழுதப்படிக்கத்தெரிந்த மக்களின் எண்ணிககை விழுக்காடு அடிப்படையிலான உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 147 ஆவது இடத்தில் இருக்கிறது.இந்தியாவில் எழுதப்படிக்க த்தெரிந்தவர்களின் எண்ணிக்கை 61% ஆகும். உலகிலேயே எழுதப்படிக்கத்தெரிந்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும் நாடு மேற்கு ஆப்பிரிக்காவைச்சேர்ந்த பாக்கினோ பாசோதான். அங்கு எழுதப்படிக்க தெரிந்தவர்கள் எண்ணிக்கை 12.8%.

நன்றி
: தமிழ் ஓசை நாளேடு (08/09/08),சென்னை

22.8.08

மக்கள் கணினி

விளக்கம்
  • சிற்றூர் தோறும் கணினிக்கல்வியை தமிழ் மொழியில் வழங்குதல் கணினி வழி தமிழ் மொழியை வழுங்குதல்.
  • சிற்றூர் வாழ் ஏழை எளியவர்களுக்கு கணினியின் மாயையைதகர்த்தெறியவும்,கணினியும் கைப்பேசிப்போன்றுதான் என்கிற மனநிலை உருவாக்கும் திட்டம்.
  • தமிழில் தகவல் தொழிலநுட்ப சேவையை சிற்றூர் மக்களுக்கு அளிக்கவும் வழிசெய்யும் திட்டம்.
செயற்பாடுகள்:
  • சிற்றூர்தோறும் கணினிக்கல்வியை தமிழ் மொழியில் வழங்குதல்.
  • சிற்றூர்தோறும் கணினிப்பயின்ற இளைஞர்களை அல்லது தன்னார்வலர்களை க்கொண்டு கல்வியினை வழங்குதல்.
  • கணினிப்போன்ற கருவிகளை கொடையர்கள்,பள்ளிக்கல்லூரிகள் போன்றோரிடம் பெற்று சிற்றூர்களில் கணினியைக்கொண்டு செல்லுதல்.
  • நேரடி களப்பயிற்சி மூலமோ இணைய வழியோ தன்னார்வலர்களுக்கு பயிற்சியளித்தல்.
  • பயிற்றுனர்/தன்னார்வலர்,தமது சிற்றூரில் நாள்தோறும் குறிப்பிட்ட கால அளவைல் பிள்ளைகளுக்கு பயிற்றுவித்தல் அல்லது தானே கற்றலுக்கு வழிக்காட்டுதல்.
  • பல்லூடக வசதிமூலம் விளையாட்டு மூலம் பாடம் பயிற்றுவித்தல்.
  • கணினியை இயக்கக்கற்றுக்கொண்டபின்,தமிழ்க்கல்வியளித்தல்.
  • கலை,இலக்கியம்,பண்பாடு,சமூகம்,அறிவியல் குறித்த பல்லூடக காட்சிமூலமோ தமிழ் மரபு கல்வி வழங்குதல்.
  • இணைய நடுவம் மூலம் பாரடங்களை அனைத்து சிற்றூர் கணினிகளுக்கும் பகிர்ந்தளித்தல்.
  • குறைந்தளவு , சிற்றூரில் உள்ள அனைத்து பிள்ளைகளும்,வாய்ப்பிருந்தால் பெரியபவடர்களும் கணினியின் தொடுதலையும்,மாயையும் ஒழித்தவர்களாகவும் உருவாக்க வேண்டும்.பின்னர்,படிப்படியாக அவர்களின் விருப்பம்போல் பயிற்றுவிக்க வேண்டும்.
  • தமிழகத்தின் சில நகரங்களில்,பேறரூடராட்சிகளில் தொண்டு நிறுவனங்கள் ம்Uலம் குறைந்த செலவில் கணினிக்கல்வை வழங்குகிறார்கள். ஆனால்,அங்கு சிற்றூர் பிள்ளைகள் முழுதும் பயன் பெறமாட்டார்கள் என்பது உறுதி.
  • நாம் எல்லா பகுதிகளையும் ஒருங்கிணைக்க முடையும்.
  • நம் ஊரில் தனி நபர் முன்னேற்றம் கணினி வர எட்டவில்லை.ஆளுக்கொரு கணினி என்ற நிலை ஏற்படும் போது மட்டுமே,இணைய வழி கல்வியை அளிக்க முடியும்.
  • தமனியார் பள்ளிகளில் இத்தகைய வசதியை ஓரளவு மணவர்களுக்கு அளிக்கிறார்கள். ஆனால், அரசுப்பள்ளிகள் நிலை கேள்விக்குறியே.!
  • ஆகையால் ஊருக்கு கணினி என்ற நிலையை நாம் முன்னெடுத்து செல்வோம். கணினி ம்Uலம் அவர்கள் வாழ்க்கையை , வாழ்க்கை கல்வியைம, உலக அறிவை,அறிவியல் பாங்கை அறிய செய்வோம்.
  • நம் தமிழர் எல்லாமறிந்தவர்களாய் உருவக்குவோம்.
  • நம்மோடு உலகெங்கும் பரவியிருக்கும் தமிழர்களையும்,அவர்தம் திட்டங்களையும் ஒருங்கிணைத்து,ஒருக்க்Uட்டுத்திட்டத்தை நிலை நிறுத்தி செயல்படுவோம்.செயல்படுத்துவோம்.
  • தமிழில் தகவல் தொழில்நுட்பத்தை உருவாக்குவோம். தமிழருக்கு அதனை வழங்கிடுவோம்.
இணையைக்கல்விக்கரு:
  • இத்தகைய முயற்சியில் சுவிசு நாட்டைச்சார்ந்த STEPITH அமைப்பு முயன்றிருக்கிறது. ஆனால், அது இப்போது எங்குள்ளது என்பதே தெரியவில்லை.
  • 'இலக்கப்பாடி' (Digital Village) திட்டம் இணையவழி கணினிக்கல்வியளிக்கைறது.அது சார்ந்த திட்டங்களும் உள்ளே வைத்திருக்கிறது.
உதவிக்கரு:
  • கல்லூரி : கணினி,தொழில்நுட்பம்,மாணவர்கள்,ஆசிரியர்கள்.
  • பள்ளிகள் : பாடம் நடத்த இடம்.
  • ஊர்மன்றம் : மின் வசதி,ஒத்துழைப்பு.
  • கொடையர்கள் : பொருளாதார யதேவைகள், கணினி.
  • தன்னார்வலர்கள் : பயிற்றுவிக்க.

தமிழ்க்கல்வி:

பள்ளிசாரா தமிழ்க்கல்வி:
  • ஆரம்பநிலை தமிழ் கற்றல்.
  • சங்க இலக்கியங்கள் கற்றல்
  • கலை இலக்கியம் பண்பாடு அறிதல்.
  • கணினிவழி/இணைய வழி பல்லூடக வசதியுடன் தமிழ் கற்றல்.
  • இலக்கணம் கற்றல்.
பள்ளிச்சார் தமிழ்க்கல்வி:
  • இலக்கிய மன்றங்கள் உருவாக்குதல்
  • தமிழ் மொழிகசார் பயிற்சியளித்தல்.
  • பல்லூடக விளக்கப்படங்கள் காண்பித்தல்.
  • மொழிசார் அறிவியல் வளர்ச்சிக்கு ஊக்குவித்தல்.

கணினிக்கல்வி:
  • தனிநபர் கணினிப்பயிற்சியை ஊக்குவித்தல்.
  • சிற்றூர்புற மக்களுக்கு கணினிப்பயிற்சியளித்தல்.
  • தமிழ் வழியில் கணினி அறிவித்தல்.
  • பள்ளிக்கல்லூரிகளில் அறிவியற்றனமிழ் மன்றங்கள் உருவாக்கி,தமிழ் மூலம் அறிவியலும்,அறிவியல் மூலம் தமிழும் வளர்ச்சிக்காண செய்தல்.
  • பருவந்தோறும் பள்ளிக்கல்லூரிகளில்,இளைஞர்களுக்கு கணினி, அறிவியல், தமிழ் குறித்த விழிப்புணர்வு விளக்கப்படம் காட்டுதல்.
  • சிற்றூர்புற கணினிபயிற்சி நடுவத்தை அமைத்தல்.
  • தமிழ் மென்பொருட்களை பயன்படுத்த ஊக்கப்படுத்துதல்.
  • பள்ளிக்கல்லூரிகள் தோறும் தமிழ் மென்பொருள் தேவையின் விழிப்புணர்வை மாணவர்களுக்கு கருத்தரங்கம் மூலம் வழங்குதல் .
  • இளம் அறிவியல்/தொழில்நுட்பம்/பொறியியல் அறிஞர்களை மொழிசார் கணினிநுட்பத்தை உருவாக்கும் ஆற்றலை இனங்காண முயற்சி செய்தல்.
  • தமிழ்த்துறை மாண்வர்களுக்கு கணினியின் பயன்பாட்டை கற்பித்தல்.



மேற்படி ஆலோசனைகள் வேண்டுகிறேன்:
வெ.யுவராசன்,
YourRaajV@Gmail.com
www.thamizhthottam.blogspot.com

15.8.08

மின்தமிழால் மண்தமிழ் காப்போம்

அன்பிற்கினிய நண்பர்கள் பார்வைக்கு வணக்கம்.

அளவிட முடியாத பழமைவாய்ந்த நம் மொழி,காலத்தால்,பல மாறுதல்களை கண்டு, சிதைந்த நிலையில் தமிழ் இனத்தால் பின்பற்றப்படுகிறது.இச்சிதைவு நிலை களையவே மின்னிலும் மண்ணிலும் இயக்கங்களும் போராட்டங்களும்.!

மின்னில் நாம் வலுவாகவே பதிந்து வருகிறோம். இனி பயமில்லை,எப்படியாவது தமிழ் வளர்ச்சி கண்டுவிடலாம். ஆனால், மண்ணில்தான் பெருஞ்சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.

தமிழ்மண் காக்கப்படவேண்டும்.சுரண்டல்களுக்கும்,சீரழிவுக்கும் ஆளாக்கப்படக்கூடாது.இதன் பொருட்டு மின்னால் மண்ணின் தமிழ் வளர்ச்சி காண திட்டமொன்று தீட்டியிருக்கிறேன் . நண்பர்கள் பரிசீலித்து,செயற்படுத்த பரிந்துரைக்கவும்.

சிற்றூர் தோறும் ஏழை எளிய மாணவர்களுக்கு இருவழியில் கல்வியளிக்கலாம்.
அ. தமிழ் வழி கணினிக்கல்வி
ஆ.கணினி வழி தமிழ்க் கல்வி


<> தமிழ் வழி கணினிக்கல்வியானது,இன்று நம் சிற்றூர்புற மாணவர்களுக்கு இளைஞர்களுக்கு பெரும் பயனளிக்கும் . தன் தாய்மொழியிலேயே உலகம் போற்றும் ஒரு கருவியின் பயன்பாட்டை அறியும் வாய்ப்பு அவர்களுக்கு கிட்டும்.
ஆங்கில மாயையை உடைத்தெறிந்து,தமிழால் வழங்கும் போது ஆர்வம் மிகும்.

<> தமிழை மதிப்பெண் பாடமாக மட்டும் போற்றும் பள்ளிகளால்மாணவர்கள் தமிழ் மொழியை முழுமையாக கல்லாநிலை உருவாக்குகிறது.தெளிந்த விளக்கத்துடன் பல்லூடகவழி கணினியில் வழங்கும் போது ,தானே கற்றல் மூலம் சிக்கலின்றி தமிழ்மொழி அறிவர்.

இதனோடு, தமிழ்மரபு,கலை இலக்கியம் பண்பாடு போன்றவற்றை நாம் கற்பிக்கமுடியும்.
இயல் இசை நாடகம் அறிவியல் ஆகிய நான்கு தமிழும் கணினி வழி அறிதலை நாம் ஏற்படுத்த வேண்டும்.

செயல்வடிவம்.

அ. சிற்றூர் தோறும் ஓர் ஆர்வலரை கண்டறிந்து , அவர்மூலம் நம் செயல் திட்டங்களை செயற்படுத்துதல்.
ஆ. அந்தந்த பகுதியிலுள்ள கல்லூரிகள்/பள்ளிகளின் உதவியோடு கணினி கல்வி தர முடியும் அவர்கள் உதவியால் கணினி பெற்று அக்கல்விநிலைய (நாட்டுநல பணித்திட்ட) மாணவர்கள் துணைக்கொண்டு இப்பணியை மேற்கொள்ளலாம்.

இ. நம் நாட்டில் ஒவ்வொரு சிற்றூர்(ஊராட்சி) மன்றத்திலும் கணினி வழங்கப்பட்டுள்ளது.அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று,அக்கருவிகள் மூலம் எளிமையாக இணைய வழி பயிற்சியளிக்க முடியும்.
(அனைத்து வசதிகள் கொண்ட ஊராட்சி கணினிகள் பயன்படுத்தாது பாழடைந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது)
இது நான் தயாரிக்கும் "மக்கள் கணினி" திட்டப்பணியின் சுருக்க விளக்கம்.
இதனை செயற்படுத்த இணைவோம் இயற்றுவோம்!!!

வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...