இன்று பெப்ரவரி 21 , அனைத்துலக தாய்மொழி நாள்.
1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகித்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை அரச நிருவாக மொழியாக ஆக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக உலகளாவிய மொழி தொடர்பாக நினைவு கூரப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.
வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுகோ) அமைப்பின் 1999, பெப்ரவரி 21 பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது.
பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்த நாளை யுனெசுகோ அறிவித்தது.
2000 ஆம் ஆண்டு முதல் இந்த நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
உலகில் உள்ள 6900 மொழிகலில் ஏறக்குறைய 2500 மொழிகள் அடியோடு அழிந்து விடும் ஆபத்து - ஐ நா
அதிகப்படியாக இந்தியாவில் 196 மொழிகள் விரைவில் அழிந்து விடும் என எச்சரிக்கிறது ஐ நா.
அடுத்து அமெரிக்காவில் 192 மொழிகளும், இந்தோனேசியாவில் 147 மொழிகளும் அழியும் ஆபத்து.
ஆத்துரேலியாவின் மொழியியல் வல்லுனர் கிறித்தோபர் மோசுலே தலைமையிலான 25 பேர் கொண்ட வல்லுனர் குழு ஆய்வு தெரிவிக்கிறது.
மேலும், இக்குழு, குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் பெசும் மொழிகளை பாதுக்காக்கவும் பரப்பவும் நடவடிக்கை எடுக்க ப்படாத தால் தான் அவை அழியும் நிலை ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வணிகமொழியானது தமிழ்!
தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...
-
அறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...
-
கி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன்றி...
-
புதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக